நடந்த நாட்கள்,
வானம் பார்த்த
கதைகள்,
காது நிறைத்த
சிரிப்பொலிகள்,
இருட்டு கிழித்த
தித்திப்புகள்,
புத்தாண்டின்
புன்முறுவல் காட்டிய
உன் நடனம்,
நெகிழ்ந்து நெகிழ்ந்து
சுவாசித்த இசை,
எல்லா சந்தங்களிலும்
ஒட்டிக்கொள்ளுமுன்
பாடல் வரிகள்,
ஒவ்வொரு முறையும்
உணருகிறேன்
வாழ்க்கை எவ்வுளவு
அழகானது -
உன்னால்!