நிறைந்து வழியும்
கோவிலெங்கும்
வேண்டுதல்கள்.
முனு முனுப்பது
மந்திரமாகவோ
கோரிக்கையாகவோ
இருக்க கூடும்.
சிலரின்
கண்மூடிய தரிசனங்களில்
கண்ணீரும்.
நன்றி சொல்லும்
விழிகளில் மிளிரும்
வண்ணங்கள்
கடந்து போவோருக்கும்
பற்றிக்கொள்கின்றன
நம்பிக்கை வளர்ப்பவர்கள்
கடந்து போகிற பிரகாரங்களில்!
வெறும் வேண்டுதலோடு
நின்று விடாதவர்கள்
வந்து போகிற
நொடிகளில் தான்
சக்தி உருவெறும்
பலருக்கான
நம்பிக்கை ஸ்தலங்கள்!
நம்பிக்கை வளர்ப்பவர்களை
மேலும் வளர்ப்பதே
முறையன்றோ!