பிரமாண்ட கதைகளின்
நாயகர்கள்
அங்குலம் அங்குலமாக
விவரிக்க படுகிறார்கள்.
சூழ்ச்சிகள், துரோகங்களை
முன்னறிகிறார்கள்,
உடைத்தெறிகிறார்கள்.
கோடான கோடி
எளியவர்கள் -
புகழ்ச்சி பாடுவதிலும்
மெய் மறந்து
உச்சி குளிர்வதிலும்
பொழுது நகர்த்துகிறார்கள்.
உச்ச கட்ட போரில்
காணாமல் போன
கோடியில் பாதியை
கணக்கில் எடுக்காமல்
வெற்றி பரணி பாட
பின்னொரு கூட்டம்
புறப்படுகிறது!
இப்படியாக நீளுகிற
புராண கதைகளின்
தொடர்ச்சியாகவே
நீளுகிறது நடப்பவைகளும்!!!
நாயகர்கள்
அங்குலம் அங்குலமாக
விவரிக்க படுகிறார்கள்.
சூழ்ச்சிகள், துரோகங்களை
முன்னறிகிறார்கள்,
உடைத்தெறிகிறார்கள்.
கோடான கோடி
எளியவர்கள் -
புகழ்ச்சி பாடுவதிலும்
மெய் மறந்து
உச்சி குளிர்வதிலும்
பொழுது நகர்த்துகிறார்கள்.
உச்ச கட்ட போரில்
காணாமல் போன
கோடியில் பாதியை
கணக்கில் எடுக்காமல்
வெற்றி பரணி பாட
பின்னொரு கூட்டம்
புறப்படுகிறது!
இப்படியாக நீளுகிற
புராண கதைகளின்
தொடர்ச்சியாகவே
நீளுகிறது நடப்பவைகளும்!!!