அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
புறம் பேசுதல் பத்தி ரொம்ப தப்பான கண்ணோட்டத்துல வளந்துட்டேன். அதுவே பல சமயங்கள்ல பெரிய பலவீனமா மாறிடுச்சோன்னு தோண ஆரம்பிச்சுடுச்சு.
ஒருத்தன் இல்லாதப்ப அவனை பத்தி யாரவது பேசுனா உடனே டாபிக்க மாத்தி டைவர்ட் பண்றதுலயே குறியா இருக்கிறது. சில சமயங்கள்ல ஸ்ட்ரெயிட்டா மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிடறது இதெல்லாம் எவ்ளோ பெரிய வீக்னெஸ்னு சரியாய் தெரியலை.
இதுவே இன்னொரு சைடுல இருந்து பாத்தா, நல்லா பேசிட்டு இருந்தவன் திடிர்னு மூஞ்சிய காட்டுவான். என்னடா நடந்துச்சுனு கேக்க கூட தோணாது. நம்ம சைடுல எல்லாம் சரியாய் தான் இருக்கும். அப்புறம் எதுக்கு தொங்கணும்னு விட்டுருவோம்.
கொஞ்ச நாளைக்கு அப்புறம் நம்மள பத்தி என்னல்லாம் பேச்சு வார்த்தை போயிருக்குனு கேள்வி பட்டா ரொம்ப வருத்தமா தான் இருக்கும்.
அந்த நிமிஷம் தான். மறுபடியும் பாலன்ஸ் பண்ணி நம்ம ஒரிஜினாலிட்டிக்கே போயிடுவோம். நமக்கு இதெல்லாம் செட் ஆகாது.
எது எப்படி இருந்தாலும் சரி. நம்ம சரியாய் தான் இருக்கோம்ங்கிற ஒரு தைரியம் இருக்கே அதுக்கு தான் பெரிய சலாம்.எல்லோருக்கும் அப்படி தான். பழக்கப் பட்ட வழியிலிருந்து ஒரு போதும் விலகிடுதல் மிக கடினம்.