ஒரு கைல பேப்பர், ஒரு டீ (இல்லை காபி). இது பெரிய பாரம்பரியம். உலகத்துல எந்த பக்கம் போனாலும் இந்த ஸ்டைல் மட்டும் ஒரே மாதிரி தான்.
ஆனா இன்னைக்கு எப்பவும் போல இல்லை. நானும் எல்லா பேப்பரையும் புரட்டி பாத்துட்டேன். சொல்லி வைச்ச மாதிரி எல்லாரும் ஒரே மாதிரி தான். பிசிரு தட்டாம ஒரே மாதிரி எழுதி இருக்காங்க.
எனக்கு நல்லா தெரியும். இது உண்மை இல்லை. வீட்டை விட்டு வெளிய வந்து கத்தனும் போல இருந்தது.
எவ்ளோ நேர்மையான ஆளு? அவரை போயி. சே!
இந்த நியூஸ் படிச்சிட்டு எவனெவன் என்ன பாடு படுத்துறானோ அந்த நல்ல மனுசனை?
அப்ப இதுக்கு முன்னாடி நான் படிச்சு பகிர்ந்துகிட்ட எல்லா செய்தியும் இதே மாதிரி பெரிய புரட்டு தானா?
சுவைக்காத டீ. பார்க்க சகிக்காத செய்தித்தாளோடு இப்படியா விடிய வேண்டும் இன்னைக்கு பொழுது?
நாளைக்கு வரலாறு பரிட்சைக்கு படிச்சுக்கிட்டிருக்கிற பையனின் தலை கோதி நகர்ந்தேன்.
இதே மாதிரி எத்தனை பொய் விதைக்கப்பட்டிருக்கிறதோ இந்த வரலாற்று புத்தகத்தில்!