கனியன் பூங்குன்றனார் வழியில்
நாம் செல்வதால்
கடந்தும் நாடு பல
மிளிரும் தமிழின் ஒளி.
தாயுமானவரின் எண்ணம்
சுமந்தபடி
இயங்கும் செயல்கள் வழி
உலகே உயர்வு பெறும்.
தானாய் இயக்கமில்லை
என்னை செலுத்துகிற
உந்து சக்தியிலே
அணுக்கள் தந்தவர்கள்!
தாத்தன், ஓட்டனென
ஓடித் தாண்டி பல
பரன் பரை தந்ததடா
பண்பவை அத்தனையும்!
நண்பன், சொந்தமென
தெரிந்தோர் மட்டுமில்லை
ஆசான் தந்ததென்பேன்
செய்யும் சிறப்பனைத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக