செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இரும்பு கோடாரி

தங்க கோடாரி
வெள்ளி கோடாரி
இரும்பு கோடாரி
எது உனது எடுத்துகொள் என்றது
தேவதை!

என்ன இது
எதுவுமே என்னதில்லையே?
எதற்காக தேவதையின் இந்த கேள்வி?

குழப்பம் தீராது
"இரும்பு" என்றேன்.

ஒரு புன்னகை
வெளிப்படுத்தி
"நிஜமாய் தான் சொல்கிறாயா?"
என்றது தேவதை.

மூன்றும் கிடைக்க வேண்டாம்
இரும்பாவது கிடைக்கட்டுமே
எனக்கானதாய் இல்லது போனாலும்
திரும்பவும் திருத்தமாய்
கேட்கிறது தேவதை
நிஜமாய் தான் கேட்கிறாயா?

திருந்தவில்லை இந்த முறையும்...
திரும்பவும் அதே பதில்.

எடுத்துவிட்டு போ என்று
இரும்பை குடுத்து விட்டு
திரும்பி கொண்டது தேவதை
தருவதற்காய் வைத்திருந்த
வரங்களை தராமலே!

கருத்துகள் இல்லை: