வியாழன், 27 அக்டோபர், 2016

அதிகாலை எழுவது
எத்தனை சிரமம் -
எல்லாம் மறக்கடிக்கும்
பட்டாசும், புதுத் துணியும்!!

இனிப்பு, காரம்,
பலகாரமென
வாசல் தோறும்
கோலம் -
ஊரே விழாக் கோலம்!!

நண்பருக்கு, உறவுகளுக்கு
வாழ்த்துச் சொல்ல
தேடித் தேடி
வாழ்த்து அட்டை
வாங்கிய காலமுண்டு!

அட்டை எதற்கு?
"Happy Diwali"
வெறும் ஒற்றை வார்த்தை
புன்முறுவல்கள்
இட்டு நிரப்பும்
எல்லோர் முகத்திலும்!!

இந்த வருடம்
கொண்டாடுவதில்
கொள்ளை இன்பம் தான்,
இது வரை
கொண்டாடிய நாட்களை
நினைக்கியிலே
பொங்கும் இன்பம் தான்!!

வரப்போகும் தீபாவளிக்கு
சேர்த்து வைக்க
நிறைவோடு நிகழட்டும் -
மகிழ்வோடு  கொண்டாட்டம்!!!

தீப ஒளி திருநாள்
வாழ்த்துக்கள்!!!

கருத்துகள் இல்லை: