ஞாயிறு, 28 ஜூன், 2020

தேனிசை

குழல் வழி,
மீட்டும் விரல் வழி
ஊதல் காற்றின்
உடன் வரும்
இசை வெளி நிரம்பிய
இடந்தனில்
நாயகமோ குரல் வளம்!

இடம் வலம்
தலையாட்டும்!

இருக்கை இறக்கையென
உருமாறும்!

மூடிய கண்கள்
செவிக்குள் உட்கார்ந்தவாறே
இயல்புகப்பால்
சிறகடிக்கும்!!

சங்கீத ஞான
சபாக்களுக்குள்
எட்டி பார்த்த
நினைவலைகள்
நியூரான்களெங்கும்.

காதடைத்த 
கைபேசியில் 
தளும்புமுன் 
வார்த்தைகள்.
 
சுற்று வெளியெங்கும்
சூழ்ந்து கொண்டது
திகட்டாத தேனிசை!!


கருத்துகள் இல்லை: