அந்த ஓலை சுவடி, ஆணி அப்புறம் தாடி வைச்ச தாத்தா. இவ்ளோ தான் கட்டமைக்கப்பட்ட பிம்பம். மறக்காம ரெண்டு மார்க் கேள்விகள். அடுத்த தலைமுறைக்கு என்ன ஞாபகம் வரும்னு தெரியலை.
எங்க தமிழ் வாத்தியார் குறளை பார்ட் பார்டா பிரிச்சு வேற ஒரு சீர் வரிசைல அமைச்சு புரிய வைப்பார். ஒரு குறள் பாக்கலாம்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
இந்த குரலை இப்படி வரிசை படுத்துவார்.
விரிநீர் வியனுலகத்து
விண்இன்று பொய்ப்பின்
உள்நின் றுடற்றும் பசி
பெருசா மெனக்கெடவே வேணாம். ஈஸியா புரிஞ்சிடும். அப்படிப்பட்ட ஆசிரியரோட மாணவன் என்னவெல்லாம் சாதிக்க முடியும்! என்னவெல்லாம் சாதிச்சிருக்கணும். ஆனா திரும்பி பாத்தா எதையோ தேடி எங்கயோ அலைஞ்சு திரிஞ்சு. சரி விடுங்க.
இடைல திடிர்னு ஒரு புத்தி வந்து பிள்ளைகளுக்கு திருக்குறள் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதோட அடுத்த வடிவம் தான் இந்த முயற்சி. இந்த முயற்சிக்கு பின்னாடி எங்க அப்பாவும், மாரிமுத்து வாத்தியாரும், என் தமிழ் ஆசிரியர்களும் கண்டிப்பா இருக்காங்க.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக