ஞாயிறு, 7 டிசம்பர், 2025

பாரதிக்கு நன்றியோடு

ஒரு பக்கம் அயல்நாட்டான் 

ஆட்டத்தின் வேதனை 

அவர் அடிபிடித்தே 

பிழைப்போட்டும் மறு கூட்ட 

போதனை 


வரலாறு அறியாத 

அறியாமை 

அறிவற்றோர் என நம்மை 

அடையாளம் செய்திட்ட 

சூழ்ச்சி சுழல் 


தலைசுற்றி மதிகெட்டு 

செய்வதேது புரியாது 

திக்கற்று நிற்கிலை நீ 


மொழியின் வலி பிடித்து 

கவிதை உளி பிடித்தாய் 

பழமை உடைகையிலே 

பதறிய மனதுடைத்தாய் 


மரபை அறிந்தவனே

புதிய அழகு செய்தாய் 

எவரும் உணரும்படி 

எளிமை சூடி வைத்தாய் 


உன்னை சிறைபிடிக்க 

எழுத்தின் கரமுடைக்க 

இயலா இங்கிலாந்தின் 

புதிய முகம் படைத்தாய் 


வயதும் நீளமில்லை 

பெரிதாய் பொருளுமில்லை 

தலைமுறை கடந்துமுந்தன் 

செயலுரம் செய்தவன் நீ 


இன்னும் தலைமுறைகள் 

பெருமை சூடிக்கொள்ள 

மீசை தந்தவனே 


இசைக்கும் வரிகள் தனை 

முன்னாள் படைத்து வைத்தாய் 

மொழிக்கு தலைப்பாகை 

ஒன்றும் செய்து வைத்தாய் 


எடுத்து சூடிக்கொண்டோம் 

கனவை ஏற்றிக்கொண்டோம் 

இனியும் வீணடிக்கா 

கொள்கை ஏற்றுக்கொள்வோம்





கருத்துகள் இல்லை: