விளைஞ்சதெல்லாம் ஊருக்கு
பயன்படவே கொடுத்துட்டு
குடிசையில வாழ்ந்தாலும்
கும்பிடனும் சாமி உன்னை
ஏதேதோ வேலைசெஞ்சோம்
நீ படைச்சதை தான்
வாங்கித் தின்னோம்
விதம் விதமா உடைவாங்கி
தினந்தினமும் கட்டிக்கிட்டோம்
என் தட்சணைய தரகருக்கு
தாரைவாத்து கொடுத்து நின்னோம்
சாமிக்கு உண்டியலு
செஞ்சவனை என்ன சொல்ல?
பங்குக்கு கடவுளுன்னு
நம்புவது நல்லாயில்லை
உழுத பயன் கிடைச்சிருக்கும்
உணவாகி செரிச்சிருக்கும்
அழுத கதை கேட்டிடவே
ஒருத்தனுக்கும் நேரமில்லை
நிலமெல்லாம் விளைஞ்சிருக்கு
கட்டிடங்கள் ஊர் ஊரா
தனக்கும் ஒண்ணு வேணுமின்னு
கடனாளி கூட்டமெங்கும்
விவசாயி பொழைப்பு எல்லாம்
ஓட்டாக்க சதி இருக்கு
திரையரங்க வாசலுக்கும்
கொத்துகொத்தா பணமிருக்கு
ஊர் ஊரா மேடையிலே
பேச்சு மட்டும் பெருத்திருக்கு
பேசும் வாயும் கேட்ட காதும்
முடமாவே படுத்திருக்கு
எங்கெங்கோ தேடுறாங்க
பெருஞ்செல்வம் சேக்கணும்னு
மண்ணுதாண்டா புதையலுண்ணு
புரியாத அறிவோட
லைக் ஒன்னும் கமெண்டுன்னும்
போடுறதை விட்டுவிட்டு
உழைப்புக்கு மதிப்பேற்ற
சிந்திக்கணும் கேட்டுக்குறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக