சனி, 23 ஜூலை, 2016

குருவி தலையில்
பனங்காய் -
கருத்து!

வெள்ளி, 22 ஜூலை, 2016

படபடக்கும் சிறகுகள்
மேலும் கீழுமாய்
கோலமிடும்.

உடன் நகரும் கார்னியா
பிதுங்கும் நுனியில்
மிக அருகாமையில்
சடக்கென கடந்து போகும் -
வண்ணத்துப்பூச்சி 
உள்ளெழுப்பும்
அதே உணர்வுகளைத் தான்
ஒவ்வொரு முறையும்
எழுப்பிவிட்டு போகின்றன
உன்னை பற்றியதான நினைவுகள்!!

வியாழன், 21 ஜூலை, 2016

ஆங்காங்கே அலைக்கழியும்
படகோரம்
சிறு மரத்துண்டு! 

திங்கள், 30 நவம்பர், 2015

அலட்சியம்


என்ன அவசரம்...?
படிக்கலாம்,
பரீட்சைக்கு இன்னும்
நாள் இருக்கே!


முந்தைய நாள் வரை
தொடரும் அலட்சியம்!


புத்தகமும் கையுமாய்
முடிந்த இரவோடும்
எரிகிற விழியோடும்
தேர்வறை வாசம்!


எல்லாம் மறந்தது போல்
இருக்கும்.

தேர்வறை சீட்டை
ஞாபகப் படுத்திய
அம்மா மாதிரி
யாரேனும் உடன் தேவை
தேர்வறையிலும்!

நினைவில் நின்றதும்
இட்டுக் கட்டியதுமாய்
முடித்துக் கட்டி
வெளியேறுகையில்
உடன் தொடரும் -
நமக்கு நாமே
சமாதானம்!

"அடுத்த முறை
இதே தவறு
நிகழக்கூடாது"

இப்போதும்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது -
எல்லா நிலைகளிலும்,
எல்லா இடங்களிலும்!!!

புதன், 25 நவம்பர், 2015

அளவுகோல்

பள்ளிநாட்கள்
முதல் அறிமுகம் !

கணக்கு வகுப்புகளில்
மட்டுமல்லாது
எல்லா நிலைகளிலும்
உபயோகப்படுத்தப் பட்டன

சம்பந்தமே இல்லாத
வேறு வேறு அளவுகோலோடு
நட்பு வட்டாரமும்,
பெற்ற வட்டாரமும்.

தேருமோ, தேராதோ??
வினாக்களுடனே
சுற்று வட்டாரமும்!

எல்லா அளவுகோல்களையும்
கடந்து வந்த நானும்
கையோடு வைத்திருந்தேன் -
என்னால் முடிந்த அளவுகோல்!

பற்பல சோதனைக்கப்பாலும்
முடிவுக்கே  வர முடியவில்லை -
சரியான அளவுகோல் தானா இது?

சரியென குறிக்கிற
புள்ளிகளில் இருந்து
சிறிதோ பெரிதோ
நகர்ந்தே முடிகிறது -
கோணங்கள் மாற்றி
பார்க்கிற ஒவ்வொரு
பார்வையுலும்!

முயற்சிகள் இன்னும்
தொடர்ந்தாலும் ...

தூர எறிந்துவிட்டு
நகர்கிற நிமிடங்களில் தான்
உணர முடிகிறது ...
வாழ்வின் மகத்துவம்!

புதன், 19 செப்டம்பர், 2012

சிறு தேங்காய் துண்டு,
பொறிக்குள் மாட்டிக்கொண்ட எலி
சுவைக்குமா?

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மிதப்பு


நிரம்பி வழிகிற 
மது கிண்ணங்களின்
உள்ளமர்ந்து, 
மிதந்து, 
கண்மூடி,
கைகள் படர்ந்து,
கால் பாதம் 
பியானோ இசைக்கிற வாகில் 
காற்தடம் நகர்த்தி, 
நீந்தி..
கரையேற மனமின்றி 
நீட்டி 
நெடுதூரம் பயணித்த
நாட்கள் 
பதிந்து வைத்திருந்த 
ஒலி ஒளி நாடா
தேயத் தேய அழுகிறது

கொட்டி தெரிக்கிற
சுவையோடு 
அகண்டு ஓடும் 
ஆற்றங்கரை 
அருகாமையற்று, 
ஏரி ஓரம் 
காத்திருப்பதை 
அறியாமையோ 
சோம்பேறித் தனமோ 
இல்லையென 
விதி மேல் பழி சொல்லி 
வீணே கிடக்கிறது
ஓடம்!