வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

வார்த்தைகள்
சர்வ சாதரணமாய் 
வசப்படும்

மறுபடி படிக்கையில் 
தலையேறி 
போதை நிக்கும் ...
நீ தானா எழுதியது???
நம்ப மறுக்கும்.

காலையில் நிகழ்ந்தது
சாதரணமில்லை தான்
மதியம் நிகழ்வதோ
அதற்கும் மேலே


நொடிக்கு நொடி
இது அதே வாழ்க்கை தானா
என தலைசுற்றும்!

தெளிவாய் நகர்ந்த 
நாட்கள் அவை!
எளிதாய் வாய்ப்பதில்லை
எல்லோருக்கும்!

இனிதாய் வாய்த்தது
உன்னோடு!


ஆசிர்வதிக்கப்பட்ட
நொடிகளில்
ஒவ்வொரு தடவையும்
உடனிருந்தாய்!

நீ உடனிருக்கிற
நொடிகளில்
ஒவ்வொரு முறையும்
ஆசிர்வதிக்கப்படிருக்கிறேன்!

கருத்துகள் இல்லை: