எழுத்தாணி கொடுத்தே நீ
ஏற்றிவிட்டாய் ஏணியிலே!
பழுத்திட்ட பாசமூட்டி
கொழுத்திடவே வளர்த்ததும் நீ!
உழைப்பதுவே தொழுதலென
உணர்ந்ததுவும் உன்னாலே!
களைப்பில்லா களிப்பொன்று
விழைத்திட்ட செயலோனே!!
கந்தலாய் கலங்கிய நாளில்
தந்தையானாய்
தெளிந்திட உயர்ந்திட நானும்
பெருமிதமானாய்!
போற்றி உனக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக