திங்கள், 21 ஜூன், 2021

போற்றி உனக்கே!

எழுத்தாணி கொடுத்தே நீ 

ஏற்றிவிட்டாய் ஏணியிலே! 

பழுத்திட்ட பாசமூட்டி 

கொழுத்திடவே  வளர்த்ததும் நீ!


உழைப்பதுவே தொழுதலென 

உணர்ந்ததுவும் உன்னாலே!

களைப்பில்லா களிப்பொன்று

விழைத்திட்ட செயலோனே!! 


கந்தலாய்  கலங்கிய நாளில் 

தந்தையானாய் 

தெளிந்திட உயர்ந்திட நானும் 

பெருமிதமானாய்!

போற்றி உனக்கே!



கருத்துகள் இல்லை: