தாயவள் குரலினில்
இசையானதென் தமிழே!
தயையுடன் தலை கோதும்
தந்தையவன் குறும் பேச்சே!
ஓதுமொரு உளியெடுத்து
செதுக்குமொரு ஆசானே!
செவி மடுத்துடன் வளர்ந்த
தோழனது தேன் பேச்சே!
விழியுணர் வழியிலெங்கும்
கண் நிறையும் கலை நீயே!
வடிவான தமிழே உனை
வணங்கிடவே பேறு பெற்றேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக