கவிதை கொடுத்ததும்
பெருமை பெருத்ததுமான
நெடியதோர் கூட்டுழைப்பு
தூரம் குறைத்ததும்
நேரம் மதித்ததுமாய்
இருபுறம் தினம் கடப்பு
ஊரையே எழுப்பிய சத்தம்
ஓட்டியவன் காதையும்தானே
கிழித்திருக்கும்?
விழித்தாலும் பயனிலா
நொடியின் தவிப்புகள்
கொடூரமானவை
பிடியிலிருந்து விடுபடும்
கப்பல்கள் மட்டுமா
உடைக்கின்றன பாலங்களை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக