செவ்வாய், 26 மார்ச், 2024

பால்டிமோர் பாலம்

கவிதை கொடுத்ததும்

பெருமை பெருத்ததுமான

நெடியதோர் கூட்டுழைப்பு


தூரம் குறைத்ததும்

நேரம் மதித்ததுமாய்

இருபுறம் தினம் கடப்பு


ஊரையே எழுப்பிய சத்தம்

ஓட்டியவன் காதையும்தானே

கிழித்திருக்கும்?


விழித்தாலும் பயனிலா

நொடியின் தவிப்புகள்

கொடூரமானவை


பிடியிலிருந்து விடுபடும்

கப்பல்கள் மட்டுமா

உடைக்கின்றன பாலங்களை?



கருத்துகள் இல்லை: