செவ்வாய், 26 மார்ச், 2024

சிறகு மொட்டவிழ்த்த நாட்களில்

சொல்லப்பட்ட கதைகளில்

சிட்டுக்குருவியை

கவ்வியபடியே கடந்துபோனது

பருந்து


சிறகு வலிக்கிற நேரம்

இறங்க இடம் கிட்டாது

கடலில் விழுந்த

ஆல்பட்ரோஸ்


பறக்கிற புறாக்களையே

குறி வைக்குமாம்

அம்புகள்


இன்னும் 

கருவால் வாத்து,

கரிச்சான்,

இருவாய் குருவிகள்

கதைகளனைத்தும்

கேட்டிருந்த மிரட்சியோடே

அடை காத்துக்கொண்டிருந்த

உழவாரன்!

கருத்துகள் இல்லை: