சிறகு மொட்டவிழ்த்த நாட்களில்
சொல்லப்பட்ட கதைகளில்
சிட்டுக்குருவியை
கவ்வியபடியே கடந்துபோனது
பருந்து
சிறகு வலிக்கிற நேரம்
இறங்க இடம் கிட்டாது
கடலில் விழுந்த
ஆல்பட்ரோஸ்
பறக்கிற புறாக்களையே
குறி வைக்குமாம்
அம்புகள்
இன்னும்
கருவால் வாத்து,
கரிச்சான்,
இருவாய் குருவிகள்
கதைகளனைத்தும்
கேட்டிருந்த மிரட்சியோடே
அடை காத்துக்கொண்டிருந்த
உழவாரன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக