கவிதைகள் எனச் சொல்லப்படுபவைகளில்
புரிந்தும் புரியாமலுமாய்
நிறைகிற சொல்லாடல்கள்
இரசிக்கப்படவும்
வினா அள்ளித் தெளித்துமே
நகர்கிறது
“மொழியிலிருந்து
அந்நியமாகிப் போனோமோ?”
பதைபதைக்கிற மனதை
என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது?
கட்டியவள் மனதைப் போலதான்
சில கவிதைகளும்
காலம் கடந்தும்
நம்மை
முட்டாளாகவே
உணரச் செய்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக