நீங்கள் கடந்துவந்த
பாதை வழியில் தான்
காத்துக்கிடந்தது
சற்றேனும்
ஆசுவாசப் படுத்தச்
சொன்னாரே பெரியவர்
அதே இடத்தில் தான்
மூச்சு முட்ட முட்ட
இளைப்பாற மனமின்றி
ஓட்டமெடுத்தீர்களே
அந்த நொடியில் தான்
திரும்பிப் போக முடியாத
ஒற்றை வழி பயணம்
வேதனையை சுமந்துகொண்டா
மறுபடி விரையப் போகிறீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக