எல்லோரும் கடந்து போன
அதே சாலை தான்
அலறியடித்துக் கொண்டு
ஓடிய கூட்டமும்
நிதானமாக நகர்கிற
கால்களும்
எல்லைப்புள்ளியில்
பரிசுடன் யாரோ
காத்திருப்பதான புரளியை
நம்ப மறுக்கிற
பிடிவாதம்
வழிதோறும் ஒளிர்கிற
பரிசுகளை மொழிகொண்டு
சேகரம் செய்தபடியே
பயணிக்கிற பொறுமை
பந்தய வாதிகளுக்கு
வாழ்க்கை
எல்லைக்கோட்டுக்கு
அப்புறம் தொடங்குமாம்
உயிர்ப் பெருகிற வரிகளை
உணர்வுமையால்
தீட்டியவாறே
வழியெங்கும் வாழ்கிறவர்களின்
சுவர்க்கம் அங்கேயும்
கிளை பரப்பி இருக்குமோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக