வெள்ளி, 20 மார்ச், 2026

வேறெங்கும் கிளைகளில்லை



எல்லோரும் கடந்து போன 

அதே சாலை தான் 


அலறியடித்துக் கொண்டு 

ஓடிய கூட்டமும் 

நிதானமாக நகர்கிற 

கால்களும்


எல்லைப்புள்ளியில் 

பரிசுடன் யாரோ 

காத்திருப்பதான புரளியை 

நம்ப மறுக்கிற 

பிடிவாதம் 


வழிதோறும் ஒளிர்கிற   

பரிசுகளை மொழிகொண்டு 

சேகரம் செய்தபடியே 

பயணிக்கிற பொறுமை 


பந்தய வாதிகளுக்கு

வாழ்க்கை 

எல்லைக்கோட்டுக்கு 

அப்புறம் தொடங்குமாம் 


உயிர்ப் பெருகிற வரிகளை

உணர்வுமையால் 

தீட்டியவாறே

வழியெங்கும் வாழ்கிறவர்களின் 

சுவர்க்கம் அங்கேயும் 

கிளை பரப்பி இருக்குமோ?

கருத்துகள் இல்லை: