வளையும் நெளியும்
மொழியின் அழகில்
மிதந்தேன்
நாவில் வசிக்கும்
தேன் நீ
சுவாசம் தித்திக்கும்
மணம் நீ
பேசித் திரிந்தேன்
கிறுக்கி மகிழ்ந்தேன்
உனை
சிந்தை இருத்தி
செயலில் வடிக்க
கோவில் சிலையாய்
தொடங்குதொரு
வெற்றித் தேரோட்டம்
I am Anantha Prakash from a small south indian town Vathalagundu where great freedom fighter and writer Subramania Siva was born. By profession I am a software engineer living in Bay area. I like reading and listening. With lot of inspired people around me, started writing too 😊
வளையும் நெளியும்
மொழியின் அழகில்
மிதந்தேன்
நாவில் வசிக்கும்
தேன் நீ
சுவாசம் தித்திக்கும்
மணம் நீ
பேசித் திரிந்தேன்
கிறுக்கி மகிழ்ந்தேன்
உனை
சிந்தை இருத்தி
செயலில் வடிக்க
கோவில் சிலையாய்
தொடங்குதொரு
வெற்றித் தேரோட்டம்
திகை, அடை,
இரு,
உணர், எழு,
தகர்,
விழை, இணை,
துளிர், உழை,
வளர்,
இணை, பகிர்,
திளை, தொலை,
பிடி.
ஓம், ஓம்,
ஓம், ஓம்,
ஓம், ஓம்
ஓம், ஓம்
திகையோம்,
அடையோம்,
உணர்வுடன்
இருப்போம்.
உணர்வோம்,
எழுவோம்,
தடை தனை
தகர்ப்போம்.
விழைவோம்,
இணைவோம்,
இனியவை
வளர்ப்போம்.
ஓம், ஓம்,
ஓம், ஓம்,
ஓம், ஓம்
ஓம், ஓம்
தளரோம்,
துளிர்ப்போம்,
வளர்ந்திட
உழைப்போம்.
இணைவோம்,
பகிர்வோம்,
விளைந்திட
திளைப்போம்.
சிறுமையை
தொலைப்போம்
பெருமையை
பிடிப்போம்
ஓம், ஓம்,
ஓம், ஓம்,
ஓம், ஓம்
ஓம், ஓம்
நடந்த நாட்கள்,
வானம் பார்த்த
கதைகள்,
காது நிறைத்த
சிரிப்பொலிகள்,
இருட்டு கிழித்த
தித்திப்புகள்,
புத்தாண்டின்
புன்முறுவல் காட்டிய
உன் நடனம்,
நெகிழ்ந்து நெகிழ்ந்து
சுவாசித்த இசை,
எல்லா சந்தங்களிலும்
ஒட்டிக்கொள்ளுமுன்
பாடல் வரிகள்,
ஒவ்வொரு முறையும்
உணருகிறேன்
வாழ்க்கை எவ்வுளவு
அழகானது -
உன்னால்!
தாயவள் குரலினில்
இசையானதென் தமிழே!
தயையுடன் தலை கோதும்
தந்தையவன் குறும் பேச்சே!
ஓதுமொரு உளியெடுத்து
செதுக்குமொரு ஆசானே!
செவி மடுத்துடன் வளர்ந்த
தோழனது தேன் பேச்சே!
விழியுணர் வழியிலெங்கும்
கண் நிறையும் கலை நீயே!
வடிவான தமிழே உனை
வணங்கிடவே பேறு பெற்றேன்!
எழுத்தாணி கொடுத்தே நீ
ஏற்றிவிட்டாய் ஏணியிலே!
பழுத்திட்ட பாசமூட்டி
கொழுத்திடவே வளர்த்ததும் நீ!
உழைப்பதுவே தொழுதலென
உணர்ந்ததுவும் உன்னாலே!
களைப்பில்லா களிப்பொன்று
விழைத்திட்ட செயலோனே!!
கந்தலாய் கலங்கிய நாளில்
தந்தையானாய்
தெளிந்திட உயர்ந்திட நானும்
பெருமிதமானாய்!
போற்றி உனக்கே!
சிறகிருக்க பறவை