எப்போதோ எழுதிய
கவிதைகளையெல்லாம்
எடுத்து பார்க்கிறேன்.
விழி விரிக்கிறேன்!!
நான்
நானே தானா
நானே தானா
எழுதியிருக்கிறேன்?
எதை எதையோ கிறுக்கி
இப்போதோ வீணடிக்கிறேன்.
ஒன்றும் உரு பெறாது
அரை குறையாய் விந்தி நடக்கிறது
ஒவ்வொன்றும்!
எப்போது வருவாய்?
ஒரு கவிதை எழுத வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக