திங்கள், 21 மார்ச், 2011

ஒரு கவிதை எழுத வேண்டும்

எப்போதோ எழுதிய 
கவிதைகளையெல்லாம் 
எடுத்து பார்க்கிறேன்.
விழி விரிக்கிறேன்!!

நான்
நானே தானா
எழுதியிருக்கிறேன்?

எதை எதையோ கிறுக்கி
இப்போதோ வீணடிக்கிறேன்.

ஒன்றும் உரு பெறாது 
அரை குறையாய் விந்தி நடக்கிறது
ஒவ்வொன்றும்!

எப்போது வருவாய்?
ஒரு கவிதை எழுத வேண்டும்! 

கருத்துகள் இல்லை: