என்ன ஒரு
அழகு!
என்ன ஒரு
கம்பீரம்!
அடேயப்பா
என்ன ஒரு நடை!
என்ன ஒரு செயல் திறன்!!
என்ன ஒரு
இலாவகம்!
மயக்குதே நெஞ்சை...
என்னவொரு இனிமை!
எத்தனையருமையாய்
கோர்வையாய் வார்த்தைகள்,
வாக்கியங்கள்!
இரசனை தன்மைக்கு
எல்லைகளில்லை!
சின்ன திரை, பெரிய திரை,
இலக்கியம், இசை,
விளையாட்டு...
ஏதோ ஒன்றுக்கு
அடிமை தான்!
சந்தடி பார்த்து
சம்பாதித்து கொள்பவர்களுக்கும்
இரசனை இருக்கத்தான் செய்யும்!
எங்கே தொலைப்பார்கள்
நம்மிடம் அடித்ததை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக