கோயில்களின் நீண்ட பிரகாரங்களில்
நின்று பிரார்தித்து
நடந்து போகிற தெய்வங்கள்!
தெய்வங்கள்
கருவறையில் நிரப்பிட்ட
விண்ணப்பங்களில்
பிள்ளைகள் பெயர்கள்!!
காய்கறி, பழங்கள்
நிறைந்து வழியும்
சந்தைகளில்
கவனமாய் தேர்ந்தெடுக்கிற
கைபட்டு சுவைகூடும்.
ஊட்டமும் குடி
பின் வீடு சேரும்!
உயிர் பெற்ற
நாள் முதல்
நீ
பார்த்து பார்த்து
வளர்ந்திட்ட உயிரிது!
உன் விரல்
செதுக்கி செதுக்கி
வெளிப்பட்ட
சிலையிது!
வருடம் ஒரு நாள்
வந்து போகும் நினைவல்ல!
அம்மா நீ
காற்று வருடும்
சுவாசம் போல
என்னுள் நிறைந்தவள்!
நின்று பிரார்தித்து
நடந்து போகிற தெய்வங்கள்!
தெய்வங்கள்
கருவறையில் நிரப்பிட்ட
விண்ணப்பங்களில்
பிள்ளைகள் பெயர்கள்!!
காய்கறி, பழங்கள்
நிறைந்து வழியும்
சந்தைகளில்
கவனமாய் தேர்ந்தெடுக்கிற
கைபட்டு சுவைகூடும்.
ஊட்டமும் குடி
பின் வீடு சேரும்!
உயிர் பெற்ற
நாள் முதல்
நீ
பார்த்து பார்த்து
வளர்ந்திட்ட உயிரிது!
உன் விரல்
செதுக்கி செதுக்கி
வெளிப்பட்ட
சிலையிது!
வருடம் ஒரு நாள்
வந்து போகும் நினைவல்ல!
அம்மா நீ
காற்று வருடும்
சுவாசம் போல
என்னுள் நிறைந்தவள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக