கல்லெறிகிற
கலையில்
கரை கண்ட கைகள்!
எம்பிக் குதிக்கும்
தவளையாய்
உருமாறிய குதூகலம்!
உடைந்த சில்லுகளில்
நிறைந்து வழிகிறது
தொடுத்தவர் முகங்கள்!
ஒட்டவைக்கிற,
வெறித்து பார்க்கிற,
கடந்து போகிற
பார்வைகளாய்
பெருத்து நிரம்பி வழியும்
எல்லா துண்டுகளிலும்
முன் நாட்களின்
குதூகலங்களே -
ஒன்று பன்மடங்காய்
சிதறல்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக