திங்கள், 27 ஜூலை, 2020

சிறகிருக்க உணருகிறேன்
சிரம் மேலே உயர்த்திட்டே
விழிமூடி உலவுகிறேன்

உனதருகே நடை போட
உயிர் பூவும் விரிகிறதே

கனவெதிலும் வந்ததில்லை
ஒரு போதும் நினைத்ததில்லை
முதன்முதலாய் கனவதுவே 
முழு உருவம் கொண்டதடி

தினம் தினமாய் பெருகுதடி
விழி முழுதும் ஒளி நிறைய
உன் பிம்பம் நிறையுதடி
மனம் நிறைய, உருப்பெருக்கி
நாளமெல்லாம்  நகருமுந்தன்
புன் முறுவல் பெருகிடவே
எடை கூடி போகுதடி
என் வாழ்வில் வசந்தங்கள்




கருத்துகள் இல்லை: