வாயுயர்த்தி
வழி பிடித்து
நாள் முழுதும்
நடை நடந்து
வியர்வையிடை
ஊடுருவி
நின்றது யார்
நகர்ந்தது யார்
கண்கொத்தி பாம்பாகி
கணக்கெழுதி
தடுமாறும்
வழியேனும்
ஒற்றைக் கம்பி
ஒருச்சாய்த்து
நிலை பிடித்து
பை நிறையும்
பணம் காக்க
நாயாகி
நகருமென்
நாட்களுக்கு
இடைநிறுத்த
தேனீரே
வாய்த்த பணம்
பெரும்
பேரமிர்தம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக