என்ன அவசரம்...?
படிக்கலாம்,
பரீட்சைக்கு இன்னும்
நாள் இருக்கே!
முந்தைய நாள் வரை
தொடரும் அலட்சியம்!
புத்தகமும் கையுமாய்
முடிந்த இரவோடும்
எரிகிற விழியோடும்
தேர்வறை வாசம்!
எல்லாம் மறந்தது போல்
இருக்கும்.
தேர்வறை சீட்டை
ஞாபகப் படுத்திய
அம்மா மாதிரி
யாரேனும் உடன் தேவை
தேர்வறையிலும்!
நினைவில் நின்றதும்
இட்டுக் கட்டியதுமாய்
முடித்துக் கட்டி
வெளியேறுகையில்
உடன் தொடரும் -
நமக்கு நாமே
சமாதானம்!
"அடுத்த முறை
இதே தவறு
நிகழக்கூடாது"
இப்போதும்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது -
எல்லா நிலைகளிலும்,
எல்லா இடங்களிலும்!!!



