
இழுத்து மூடப்பட்ட
தொழிற்சாலை.
'இனி
எந்த சத்தமும்
தூக்கம் கலைக்காது'
நிம்மதியாய் வந்து குடியேறும்
தொழிற்சாலை வளாகத்து மரத்தில்
பல ஊர்ப் பறவைகள்!
'கா கா கா'
தினம் கூவி கூவி
சோறு படைக்கும்
குட்டி பெண்
விமலா வீட்டில் மட்டும்
இனி அடுப்பும் எரியாது
படிப்பும் ஏறாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக