பூங்காக்களில் என்றில்லை
நடந்து போகிற வழிகளிலும் கூட
எப்போதும் புன்னகையோடு.
ஒரு பூச்செண்டோ
இல்லை ஒரே ஒரு பூவோ
சொல்லமுடியாத வார்த்தை
இருக்க முடியுமா என்ன?
உன்னோடு
வெளியே போகிற நாட்களில்
நீ விரும்பி கேட்டு
வாங்கி கொள்கிற பூக்களில்
உனக்கு ஒரு சந்தோஷம்
ஒரு பூவே பூச்சூடி கொள்வதை
பார்ப்பதில் எனக்கோ பேரானந்தம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக