சில நூறு
மைல்களுக்கு அப்பால்
நீயும் நானும்!
நாட்களை
நகர்த்துதல்
கொடியது தான்.
நொடிகளை நகர்த்துவதே
நெடியதாய் இருக்கிறது.
இரவுகளின் நீளத்தில்
பாதி
உன் நினைவுகளோடும்
கவிதைகளோடும்
கரைந்து போக,
கனவுகளோடு மீதி
நகர்த்த வேண்டியிருக்கிறது.
எத்தனை மைல்களுக்கு அப்பால்
இருந்தாலென்ன
எப்போதும் நீயே என்னை
ஆக்கிரமித்து இருக்கிறாய் -
நெருங்கியிருக்கையில்
நெருக்கத்தாலும்
பிரிந்திருக்கையில் பெரும்
காதலாலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக