மரங்களடர்ந்த
அதிகாலை.
பெருங்குரலெடுத்து
பேசிக்கொள்கின்றன
சிறிதும் பெரிதுமான
பறவைகள்!
உதறப்பட்டோ
மடித்து வைக்கப்பட்டோ
ஒதுக்கப்படுகின்றன
இரவு நேரத்து கனவுகள்!
இருளுக்கு பழகியிருந்த
கண்களை
அகல விரித்து
மெல்லிய வெளிச்சம்
ரசிக்கிற
புன் சிரிப்புகள்!
ஒரே மாதிரி விடிந்தாலும்
ஒவ்வொரு காலையும்
புத்தம் புதியது தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக