செவ்வாய், 30 செப்டம்பர், 2008

ஆட்டுவிக்கிறாய்

கையசைவுகளுக் கெல்லாம்
கட்டுப்பாட்டு
வித்தைகள் நடந்தது.

அற்புத விளக்காய்
தேய்த்ததும் நடந்தது
விந்தைகள்.

'என்ன வேண்டும் கேள்'
எல்லாம் தந்தது
கம்ப்யூட்டர்.

என் ஆட்டுவிப்புக்கெல்லாம்
ஆட ஒரு ஆள்.
பெருமிதம் தன்னில்
திளைத்திருக்கையில்
நீ ஒரு பார்வை
பார்த்துவிட்டுப் போனாய்
அவ்வுளவு தான்!

கருத்துகள் இல்லை: