செவ்வாய், 30 செப்டம்பர், 2008

மெழுகாகிறேன்

நேற்று வரை
உணர்ந்ததில்லை.
இன்று தான்
உணர்கிறேன்

நீ கொஞ்சம்
கூடுதல் அழகு
நேற்றை விட.

எங்கிருந்து
தரப்படுகிறது?
யாருமறியாது
எப்படி வந்தடைகிறது?
எதுவுமே புரியவில்லை.

ஒவ்வொரு நாளும்
புதுசு புதுசாய்
மெருகு ஏறுகிறாய்!

நானோ
மெழுகாகிறேன்!

கருத்துகள் இல்லை: