பழுவின்
அழுத்தத்தில்
கட்டைவிரல் சத்திழந்த
மௌனம்
பரவலாய்
ஏற்றுக்கொள்ளப்படுகிற
கருத்துக்காக
கழுத்தளவு நீரில்
குரல்வளை நெரித்த
பெருந்தவம்
ஆங்காங்கே
யாரோ திணித்த
கந்தகத்தின் திரியேற்றி
சுருசுருவென
பொறி சிதற…
எப்போது வெடிக்குமோ?
எதிர்பாரா நிமிடங்களில்
வெடிப்பதற்காய்
காத்துக்கிடந்து,
தவித்திருந்த நேரத்தில்
துளி விட்டு போகிற
மழையில்
திரியிழந்து போய்
சொக்கப்பனைக்கு
சேகரிக்கப்படுகின்றன
சிந்தனைகள்
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக