ஓட்டத்தின் வேகம்
ஒரு பொழுதும்
உயர்த்தியதில்லை
செயல் திறனை
நிமிடத்தின் நிசப்தம்
நிகழ்த்திடுமே
உன்னத உள்நிலை
உயர்வு நிலை
நோட்டத்தில் சிந்தனை
சிதறுவதால்
நோக்கத்தில் தடம்புரள்
நேர்ந்திடுதே
எழுதிட, படித்திட
எழுந்திடுமே - புதிர்
முடிச்சுகள் அவிழ்க்கிற
விடைகளுமே
பாரத்தை ஓரத்தில்
இறக்கி வைத்தே
நேரத்தை இன்புற
ஓடவிட்டே
நெஞ்சத்தில் சேர்த்திட
நல்லவைகள்
எண்ணத்தின் வலுவினை
ஏற்றிடுமே
ஆயிரம் வழியுண்டு
வெல்வதற்கு எனில்
அள்ளிட அத்தனை
செய்வதுண்டோ?
செய்வது ஒன்றேனும்
நன்று செய்ய
சொன்னோதோர்
அவ்வையின் பேரனன்றோ?
அதை மறந்திட
பயணங்கள் பயனுமுண்டோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக