வளைவுகள் நெளிவுகள்
வளைத்தவனவா?
எழுதிடும் உணர்வினில்
எழுந்தனவா?
உயிரதும் மெய்யுடன்
இணைகையிலே
மூவசை நாலசை
இசைத்தனவா?
ஓரசை நிறைத்திட
ஓரத்திலே - நீ
ஊடலை கைப்பிடி
காத்திருந்து...
"உனக்கு காதல் என் மேலா
தமிழ் மேலா?"
என்ன கேள்வியடி
கண்ணே?
சொற்களின் அவசியம்
செய்தவள் நீ
அளவில்லா சந்தங்கள்
அமைத்ததும் நீ
இணைந்திடும் சொற்களின்
சீரமைப்பில் - நான்
சொக்கிட கற்பனை
தந்தவள் நீ
இத்தனை இன்பங்கள்
உள்ளதென மொழியிடம்
நெருங்கிட செய்ததும் நீ
நான்
உன்னையுமல்லவா
காதலிக்கிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக